search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பில் கலெக்டர் கைது"

    அந்திரப்பிரதேச மாநிலம் குண்டூரில் சொத்துக் குவிப்பு வழக்கில் பில் கலெக்டர் ஒருவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 50 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். #MudraboyinaMadhav #Crorepatibillcollector

    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் குண்டூர் நகராட்சியில் பில் கலெக்டராக பணியாற்றி வருபவர் முத்ரபோயினா மாதவ். பில் கலெக்டராக இருந்த அவரது தந்தை கடந்த 2012-ம் ஆண்டு பணியில் இருந்தபோது மரணம் அடைந்தார். இதன் காரணமாக மாதவுக்கு வாரிசு வேலை கிடைத்தது. அதைத்தொடர்ந்து 2016-ல் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். 

    இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாதவ் மீது புகார்கள் குவிந்தன. இதையடுத்து குண்டூரில் மாதவிற்கு சம்பந்தப்பட்ட 7 இடங்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 2 இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். 

    இந்த சோதனையின் போது நிலம், பிளாட் தொடர்பான முக்கிய ஆவணங்கள், நகைகள், ரூ.50 கோடி மதிப்பிலான பணம் ஆகியவை  கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மாதவிற்கு சொந்தமாக 4 வீடுகள், 20 பிளாட்கள், பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

    இதையடுத்து, முத்ரபோயினா மாதவை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #MudraboyinaMadhav #Crorepatibillcollector
    ×